திருமணமாகி வெறும் ஒன்றரை மாதம்! இளம் மனைவியை தவிக்கவிட்டு இளம் டிவி நடிகர் செய்த பகீர் செயல்!

மன அழுத்தம் காரணமாக இளம் சீரியல் நடிகர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது ஹிந்தி சின்னத்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மன்மீத் கிரிவால். இவருடைய வயது 32. இவர் சமீபத்தில் வடஇந்தியாவை சேர்ந்த ரவீந்திரா கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மார்ச் மாத இறுதியிலிருந்து தொடங்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக சீரியல்களில் இவரால் நடிக்க இயலாமல் போனது. வருமானம் வீட்டை முடியாத காரணத்தினால் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்தார். 

இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார். மேலும், அவருக்கு வரவேண்டிய இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கவில்லை. சீரியல்களில் நடிக்க இயலாத காரணத்தினால் அவரால் பணத்தையும் வீட்டை இயலவில்லை. இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்று விடலாம் எனவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதுவும் இந்த ஊரடங்கினால் இயலாமல் போனது. இதனால் அவர் மிகவும் மனம் உடைந்தார். நேற்றிரவு மனைவி கவுர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இவர்களை அறைக்கு சென்றுள்ளார். நாற்காலி மீது ஏறி நின்று மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாற்காலியின் சத்தத்தை கேட்டு விரைந்து சென்ற மனைவி கவுர் கணவன் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஹிந்தி சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.