ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி இன்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், ‘சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த விடியா அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த விடியா அரசே காரணியாக உள்ளது.

ந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.