விவசாயிகளின் பெருந்தலைவர் நாராயணசாமி பெயரில் விருது வழங்கும் முதல்வர் எடப்பாடியார்.

விவசாயிகளின் பெருந்தலைவர் திரு.சி.நாராயணசாமி நாயுடு அவர்கள் தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவர். அவர் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளார் விவசாயிகளின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி.


1973ஆம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி அதன் தலைமைப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, விவசாய மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார். 

தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்ட அன்னார் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோதுதான் தன் இன்னுயிரை நீத்தார். அத்தகைய பெருமகனாரின் நினைவு நாளில் அவரைப் போற்றுவதில், நாம் எல்லாம் மகிழ்ச்சி அடைகிறோம்.  

.நாராயணசாமி நாயுடு அவர்கள் நமது விவசாயிகளுக்கு, ஆற்றிய சிறந்த சேவையைப் போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் ‘திரு. சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

விவசாயிகளின் நண்பன் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறார் முதல்வர்.