குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டில் அமைத்ததாக வாழ்த்தியவருக்கு நன்றி சொல்லும் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹெ.வி.ஹண்டேவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.


தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. ’ஊக்கத்தைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்கவும், ‘லட்சியத்தில் உறுதி’என்ற குறிக்கோளுடனும், தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், செயல்பட்டு வரும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசு, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டில் அமைத்ததற்காக என்னைப் பாராட்டி தாங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளன. 

மூத்த அரசியல்வாதியும், புரட்சித் தலைவரின் இதயத்தில் இருந்தவருமான, தாங்கள் என்னை பாராட்டி, வாழ்த்தியமைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.