மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பெயர்களை சூட்டி எடப்பாடி சாதனை..!

இன்று, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களுடைய பெயர்களை சூட்டி சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து வெளியான அரசுக் குறிப்பு இதோ.


2003-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவிஅம்மா அவர்களின் தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்தஆய்வின் அடிப்படையில்வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமானநிலையம் வரையிலான 23 கிலோமீட்டர் தூரவழித் தடம் மற்றும் சென்ட்ரல் இரயில்நிலையம் முதல் பரங்கி மலைவரையிலான 22 கிலோமீட்ட ர் தூரவழித் தடம் என இரு வழித்தடங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டது.

18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநிலஅரசின் நிலங்கள் மற்றும் நிதிபங்களிப்பினை வழங்கிய பெருமை மாண்புமிகு புரட்சித் தலைவிஅம்மாஅவர்களையேசாரும். 

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்காக, தொடர் ஆய்வுகளை நடத்தி, பல்வேறு பணிகளையும், பயணிகள் சேவைகளையும் மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் பல்வேறு பயணிகள் சேவையும் பணிகளும் தொடங்கப்பட்டன.

அதனால், மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாபன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ என்பது, ‘அறிஞர் அண்ணாஆலந்தூர் மெட்ரோ’ என்று சூட்டப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்றுபெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல்மெட்ரோ’ என்று மாற்றப்பட்டுள்ளது.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்துவைத்ததாலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தைசிறப்பாக செயல்படுத்திட எடுத்தபல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும் வகையில், புறநகர் பேருந்துநிலைய மெட்ரோவுக்கு என்பது, ‘புரட்சித் தலைவிடாக்டர் ஜெ.ஜெயலலிதாபுறநகர் பேருந்துநிலையம் மெட்ரோ’ என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.