ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்துசென்னை எழும்பூருக்கு வந்தரயிலில் இரண்டாயிரம் கிலோநாய்க்கறி சிக்கியுள்ளது
சென்னையில் 2000 கிலோ நாய்க்கறி! ஸ்டார் ஓட்டல்களுக்கு கொண்டு சென்ற போது சிக்கியது!

ஜோத்பூரில் இருந்து சென்னை வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத ஆட்டுக்கறி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆய்வின் போது ரயிலின் சரக்குப்பெட்டியில் இருந்த 20 பார்சல்களள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பார்சல்களை திறந்து பார்த்த போது அவற்றில் இறைச்சிஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ் கட்டியில் வைத்து கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்த இறைச்சிகள் எந்த விலங்கின் இறைச்சி என்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.