புகைப்படம் எடுக்க வந்த முதியவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தள்ளிவிட்டதாக பொய் சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் ஓடி வந்த முதியவர்! நெருங்கவிடாமல் தள்ளிவிட்ட ஸ்டாலின்! வேலூர் சம்பவம்!

தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஏப்ரல் மாதம் பணப்புழக்கம் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவில்லை. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதியன்று நடைபெறப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி. ஷண்முகமும் போட்டியிடுகின்றனர். இதற்காக இரு கட்சித் தலைவர்களும் வேலூரில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் அவர்கள் இன்று பேரூராட்சி பகுதிகளில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது வழக்கம் போல பெண்களும், முதியவர்களும் அவருடன் கைகுலுக்கவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் விரைந்த வண்ணம் இருந்தனர்.
அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முதியவர் ஒருவர் அவரிடம் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலின் காரணமாக அவரை ஸ்டாலின் அவர்கள் சற்று தள்ளினார். இதனால் அப்பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள திமுக நிர்வாகிகள், "தலைவர் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை. கூட்ட நெரிசல் அதிகமாகும் போது இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சாதாரணமாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக எதிர்க்கட்சியினர் இதனை பெரிதுபடுத்துகின்றனர்" என்று கூறியுள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிற்காக எதிர்க்கட்சியினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டால் அரசியல் நாகரீகம் தழைத்தோங்கும் இன்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.