தொட்டில் மரணம்

நன்றாக இருந்த குழந்தை திடீரென எந்த அறிகுறியும் காட்டாமல் மரணத்தைத் தழுவுவது தொட்டில் மரணம் என்று அழைக்கப்படுகிறது. பிறந்த மூன்று மாதங்களுக்குள் இதுபோன்ற மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் தாய் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


·         எதிர்பாராமல் ஏற்படும் சுவாசத் தடையே தொட்டில் மரணம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

·         குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த அபாயம் ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம்.

·         பொதுவாக குளிர் காலத்தில் நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் இதுபோன்ற மரணம் சம்பவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

·         குழந்தையை தொட்டிலில் குப்புறப் படுக்கப்போடக் கூடாது. அதுபோல் குழந்தை இருக்கும் அறைக்குள் புகை போடக்கூடாது.

குழந்தையின் மீது கனமான போர்வை போர்த்துவதும், மூச்சு விடுவதற்கு சிரமத்தை உண்டாக்கலாம். சூப்பானை வாயில் வைத்தபடி தூங்குவதும் சிலநேரங்களில் ஆபத்தாக முடியலாம்.