கொரோனா தடுப்பு மருந்து..! முதன் முதலாக கண்டுபிடித்தது இஸ்ரேல்! எப்படி தெரியுமா?

உலகையை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்றுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ்க்கு ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், இந்த கொரோனா தொற்றுநோய்க்கு இந்த ஆன்டிபாடி மூலம் சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உலகையை அச்சுறுத்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று இணைந்து கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கு முயற்சியில் இறங்கி உள்ளானர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒரு மருந்து கண்டு அறியப்பட்டது. ஆனால் அதுவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டிலும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு நேற்று சென்றார், அப்போது அங்கு கொரோனா வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய பென்னட் இந்த பயங்கர முன்னேற்றத்திற்கான நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார். மேலும், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான நிறுவனமான (ஐ.ஐ.பி.ஆர்)-ல் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பின்னர், இந்த் தடுப்பு மருந்து செய்முறை காப்புரிமை எங்கள் நிறுவம் பெறுகிறது என்றும் ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறினார். அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து பற்றிய உலகின் மிகப்பெரிய இரண்டு சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் தற்போது இஸ்ரேல் நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாடுகள் யாரு என்று தெரியுமா? ஒன்று இந்தியாவும் மற்றொன்று அமெரிக்காவும் தான். இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.பி.ஆர்) மற்றும் இரண்டு வருங்கால சர்வதேச மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும்

இந்த செய்தி குறித்து கூறிய யெருஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் அவர்கள், சிறிய தெற்கு நகரமான யெருஹாமில் இஸ்ரேலின் முதல் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை திறக்க பெரிய திட்டங்களை இஸ்ரேல் வகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.