பெண் கர்ப்பமாக இருக்கும்போது உதடு மற்றும் அண்ணப்பகுதிகள் சரியான முறையில் இணைகின்றன. ஏதேனும் காரணங்களால் உதடு மற்றும் அண்ணப்பகுதியில் பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
உதடு, அண்ணப்பிளவு
·
ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற
பிரச்னைகளுடன் பிறக்கிறது. பெரும்பாலும் இந்தக் குழந்தைக்கு உடலில் வேறு குறை இருப்பதில்லை.
·
குழந்தையின் முகத்தில் இருக்கும்
பிளவைக் கண்டு பெற்றோர், உறவுகள், நட்புகள் ஏமாற்றமும் வேதனையும் அடைகிறார்கள்.
·
உதடு, அண்ணப்பிளவுக்கு சிகிச்சை
அளிக்கவில்லை என்றால், குழந்தை பால் குடிப்பதற்கு சிரமப்படும்.
·
வளரும் நிலையில் பல் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன்,
பேச்சுத்திறனும் குறைந்து முக அழகு பாதிக்கப்படும்.
சின்ன வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் உதடு, அண்ணப்பிளவினை
சீர்செய்துவிட முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது
அவசியம்.