வெளிமாநில பெண்கள்..! கார்கள்..! ஸ்கூட்டர்கள்..! விஐபி வாடிக்கையாளர்கள்..! தஞ்சாவூரில் ஹைடெக் விபச்சாரம்!

வடமாநிலத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட வழக்கு விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.


தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி என்று இடம் அமைந்துள்ளது. இங்கு காலை 10 மணியளவில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த காரில் இருந்து பெண்ணொருவர் வேகமாக தள்ளிவிடப்பட்டார். அந்த பெண்ணை கீழே தள்ளியவுடன் கார் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த மாதர் சங்க பெண்கள் சிலர் அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண் தற்போது உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் மருத்துவமனை நிர்வாகிகள் உரையாட முயன்றபோது, அவர் இந்தியில் பேசியுள்ளார். அப்போது இந்தி தெரிந்தவர்களை அழைத்து விசாரித்தபோது, கடந்த 5 மாதங்களாக தான் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக முகம் தெரியாத நபர்கள் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த தன்னை தூக்கி காரில் போட்டு நடுவீதியில் கீழே தள்ளிவிட்டு சென்றனர் என்றும் கூறினார். அந்த பெண்ணின் பையில் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் இருந்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்து படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

மேற்குவங்காளத்தில் "முகேஷ் மல்லிகா பார்க்" என்ற இடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். சித்தி மகனின் மூலமாக வீட்டு வேலை செய்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளார். திருச்சியிலிருந்து அந்தப்பெண்ணை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற 44 வயது நபர் தன்னுடைய காரில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியில் செந்தில்குமார் துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி செந்தில்குமாரின் மனைவியான ராஜம் அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தனர். 

தினமும் 5 ஆண்கள் என்ற வீதத்தில், அந்த பெண்ணை செந்தில்குமார் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாளுக்கு நாள் அந்த பெண்ணின் உடல்நிலை, மோசமாகி வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரின் உடல்நிலையும் மோசமாகியதாக அவருடைய சித்தி மகன் தகவல் தெரிவித்தார்.

இதனால் அந்த பெண் வீட்டிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அவ்வாறு முயற்சி செய்தபோது செந்தில்குமார், ராஜம் மற்றும் வேறு 2 நபர்கள் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி வந்து செங்கிப்பட்டி கிராமத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரைக்கூட விட்டுவிடாமல் சட்டத்தின்முன் தண்டனை பெற்று தர வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் காவல்துறையினரை வலியுறுத்தினர். உடனடியாக காவல்துறையினர் வடமாநிலத்து பெண்ணின் வீட்டு உரிமையாளரான செந்தில்குமாரை அணுக முயற்சித்தனர். ஆனால் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி ராஜம் ஆகியோர் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். 

உடனடியாக அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஒருவழியாக ராஜம், செந்தில்குமார் ஆகியோரை காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தியது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. ஏற்கனவே காவல் துறையில் பணிபுரிந்து லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக நீக்கம் செய்யப்பட்ட 2 உதவி காவல் ஆய்வாளர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பின்னர் அவர்களையும் கைது செய்து ரகசியமான ஒரு இடத்தில் வைத்து தொடர்ந்து வருகிறது என்று கூறப்பட்டது. அவர்களிடமிருந்து 4 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், 1 டைரி ஆகியவற்றை காவல்துறையில் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 

தஞ்சாவூரில் 7 இடங்களில் வாடகைக்கு வீடெடுத்து பாலியல் தொழில் செய்து வந்ததையும்  காவல்துறையினர் கண்டறிந்தனர். வீட்டு உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடுகளாக தேர்ந்தெடுத்து தொழில் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பிரபாகரன் பேருதவியாக இருந்துள்ளார்.

காவல்துறையினரிடமிருந்து எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் பிரபாகரன் கவனித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ரெய்டு ஏதேனும் நடந்தால், அதற்குள் பெண்களை வேறு இடத்திற்கு தப்பிக்க வைத்து விடுவார். சந்தேகம் வராமல் இருப்பதற்காக இவர்கள் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழில்களையும் செய்து வந்துள்ளனர்.

பல வெளிமாநிலத்து பெண்களை அழைத்து வந்து அவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என 1000-க்கும் மேற்பட்ட கஸ்டமர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்ற காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்தால் நிச்சயமாக பெரும்புள்ளிகள் இந்த வழக்கில் சிக்கி கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.