இன்று சூரிய கிரகணம் முடிந்த பிறகு வெற்றிலையை நான்காக வெட்டி குளிக்கும் நீரில் போட வேண்டும்..! ஏன் தெரியுமா?

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்திற்கு முன்பும் பின்பும் வீட்டில் செய்யவேண்டிய முக்கியமான வழிமுறைகளை இந்த செய்தியின் மூலமறிந்து கொள்வோம்.


இந்தியாவில் நாளை காலை 10:22 முதல் மதியம் 1:44 மணி வரை சூரிய கிரகணம் நிலவும் என்று கூறப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதுதான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும். இந்த கிரகணமானது இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், சீனா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம்.

சூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.

"சகல தோஷம் நிவர்த்தியாமி" என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும். குளித்து முடித்த பின்னர் பூஜையறையில் சுத்தமான துணியை எடுத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும். பூஜை அறையில் உள்ள விக்கிரகங்களை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். நிச்சயமாக பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பால், பன்னீர், விபூதி, அருகம்புள் அல்லது வெட்டிவேர் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அனைத்து விக்ரகங்களுக்கும் அபிஷேகம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில் வெட்டிவேர் கலந்து கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டு தற்போது வரை பிறந்த குழந்தைகள் நிச்சயமாக சில தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தோஷநிவர்த்தி வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வீட்டின் வாசலில் மாவிலை மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டும். அபிஷேகம் செய்து முடித்தபின்னர் விக்ரகங்களுக்கும்,  படங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

இந்த நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும். அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால் நிச்சயமாக சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.