நீளமான முடி வளர்ப்பதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டுமா?

நம் உடலில் சுரக்கும் எண்ணெய்ச் சத்தும், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ச் சத்துமே நம் முடிக்குப் போதுமானவை.


தலையில் நன்றாக எண்ணெய் தடவி, வாரி, வெயிலில் சென்றால் எவ்வளவுதான் தலைமுடி இருந்தாலும் அது கொட்டுவது நிச்சயம்.

தலைக்குக் குளிக்கும்போது எண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு அரை மணி நேரம் விரல்களின் நுனிப்பகுதியால் (நகம்படாமல்) விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன், நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் கலந்து இலேசாகச் சூடு செய்து மசாஜ் செய்து ஐந்து நிமிடம் சூரிய ஒளி படுமாறு செய்து அல்லது வெந்நீரில் நனைந்த டவலை ஐந்து நிமிடம் சுற்றிக்கொண்டு, பின்னர் ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தரமான சிகைக்காய்ப்பொடி கொண்டு அலசினால் முடி நன்கு வளரும். முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.