2024 தேர்தல் இந்தியாவின் ஜாதகம் என்ன சொல்லுது..?

பிரபல ஜோதிடரின் துல்லிய கணிப்பு


ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு இந்தியா ஒன்றுபட்ட நாடாக இல்லையென்றாலும் இங்கே செல்வங்கள் கொட்டிக் கிடந்தன. இவற்றை கொள்ளை அடிப்பதற்கே பல நாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்தனர். அதேநேரம், வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர் ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்றுபடுத்தி உழைப்பையும் செல்வத்தையும் சுரண்டிக் கொழுத்தார்கள். இங்கு நிலவிய பெண்ணடிமை, ஜாதி, சமய ஏற்றத் தாழ்வுகள் போக்கவும் கல்வியும் புதிய தொழில்கள் உருவாகவும் அவர்கள் காரணமாக இருந்தனர் என்றாலும் இத்தனை ஆண்டுகளாகியும் இந்தியர்கள் ஏழையாக இருப்பதற்கே ஆங்கிலேயர்களே முழு காரணம்.

காங்கிரஸ் இயக்கம் உருவானபிறகே இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வு ஒன்றுபட்டு எழுந்தது. அமைதிப் புரட்சியாக காந்தியின் தலைமையில் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில் வெள்ளையர்கள் சுதந்திரம் தரவேண்டிய சூழலுக்கு ஆளானார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதும் தேனாறும் பாலாறும் ஓடும் என்று மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் அடித்த கொள்ளையை ஜனநாயகம் என்ற பெயரில் நம்மூர் அரசியல்வாதிகள் தின்று கொழுத்தார்கள். அதனால் ஓட்டு போடுவதற்கு காசு வாங்கும் அளவுக்கு மக்களும் கேவலமான மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தான் தங்கள் நிலை என்று மக்கள் உணர்ந்துவிட்டனர். அதனால், காசு கொடுத்தால் ஓட்டு என்ற அளவுக்கு மக்கள் மனநிலை மாறிவிட்டது. எனவே, இப்போது இந்திய நாட்டின் ஜாதக நிலை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இந்திய ஜாதகம்

இந்தியா சுதந்திரம் பெற்ற ஜாதகத்தை புதிய கோணத்தில் காண வேண்டும் அதன்படி இந்தியா சுதந்திரம் 15-8-1947-ல் இரவு 12.00 மணிக்கு டெல்லியில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதற்கு உரிய கையெழத்து ஒப்பந்தம் ஆகி அறிவிப்பு வெளியாகின அதன்படியே ஜாதகம் போடப்பட்டது.

சுதந்திரம் கிடைக்கும் போது ரிஷப லக்னம் கடக ராசியில் பூசம் நட்சத்திரம் நடைபெற்றது இதனால் சனி திசை முழுமையாக நடைபெற்றது. 1960 வரை சனி திசை காலம் நாடு வளர்ச்சி பாதையில் வேக நடை போட்டது அதன் பின் புதன். கேது சுக்ரன் சூரியன் சந்திரன் வரை வளர்ச்சியில் உள்ளது.

தற்போது சந்திர திசை சுக்ர புக்தி 10-9-2025 வரை நடைபெற உள்ளது. இக்கால கட்டத்தில் பெண்களுக்கு ஆபத்தான காலகட்டம் எனில் சந்திரன் சுக்ரன் கடக ராசியில் நிற்க அதற்கு கோச்சார ராசியில் சனி நிற்க பெண்களுக்கு நிறையவே சிக்கல் உருவாகும்.

பொதுவாக மக்கள் ராசியான கடக ராசிக்கு தற்போது சனி கும்ப ராசியில் அஷ்டமத்தில் இருப்பதால் எதிர்பாராத விபத்துகளும் மரணமும் அதிகரிக்கும். ஜாதி, மத மோதல் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும். சனி கும்ப ராசியை விட்டு செல்லும் வரை அதாவது 2026 வரை பொதுமக்கள் பீதியில் தான் இருப்பார்கள். சந்திரன் திசை சுக்ர புக்தி நடைபெறும் காலத்தில் புயல் மழை வெள்ளம் பெருகி வரும்.

2024ம் ஆண்டு முழுவதும் நிலையான ஆட்சி இல்லாமல் குழப்பமே நிகழும். 2025-ம் ஆண்டு செவ்வாய் திசையில் திறமையான மனிதர்கள் கையில் ஆட்சி போகும். விவசாயத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.

கணித்தவர் : ஆர். சூரியநாராயணமூர்த்தி

தொடர்புக்கு : 9443923665 & 98650 65849