இன்றைய தினம் குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து வடமாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நிலவிவருகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார் அமித்ஷா..!

பாகிஸ்தான் , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இந்த குடியுரிமை திருத்த மசோதா இன்று காலை 10 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர் சங்கத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவசாகர் சார்ந்த பகுதியில் நிர்வாண போராட்டங்கள் செய்த மக்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் மணிப்பூர் தலைநகரிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதா இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதேசமயம் 545 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜகவிற்கு 303 எம்பிக்கள் ஆதரவு தெரிவிப்பதால் இந்த குடியுரிமை திருத்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.