தந்தை கண்முன் மகள் கதற கதற கற்பழிப்பு! ஒருவன் மாறி ஒருவன் என 6 பேர் வெறிச் செயல்!

தந்தையை கட்டிப்போட்டு அவர் கண்முன்னே 19 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஈவு இரக்கமற்ற காமுகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


பிகார் மாநிலம் கிருஷ்ணகாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தந்தையும் மகளும் இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியாக அவரது வீட்டிற்குள் நுழைந்து உள்ளது.

 

இருவரையும் சரமாரியாக தாக்கிய அந்த 6 பேரும் தந்தையையும் மகளையும் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். தந்தையின் கை கால்களை கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு அவரது 19 வயது மகளை அவர் கண்முன்னே ஆறு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

 

தன் கண் முன்னே மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போதும் காப்பாற்ற முடியவில்லையே என்று அவரது தந்தை கத்தி கதறியுள்ளார். இதையடுத்து இருவரையும் அந்த கும்பல் மிரட்டி உள்ளதுஇந்த சம்பவம் பற்றி வெளியே சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

 

கண்ணீரும் கம்பலையுமாக அங்கிருந்து சென்ற தந்தையும் மகளும் கோதிவாடி காவல்நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் அதே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று அந்தப் பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தியுள்ளார்நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.


இந்நிலையில் புகாரை பெற்றுக்கொண்ட காவல்நிலையம் மட்டுமல்லாது, அருகே உள்ள காவல் நிலையங்களும், இந்த ஆறு பேரையும், கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது