இளம் பெண்களின் பிணங்களைத் தேர்வு செய்து உடலுறவு கொண்ட பயங்கரம் பிரிட்டனில் கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இளம் பெண்களின் சடலங்களை தேர்வு செய்து உடலுறவு! கொடூர மனிதன் கைது!
பிணங்களுடன் உடலுறவு கொண்ட திருடனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை
விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனின் பிர்மிங்காம் நகரை சேர்ந்தவன் காசிம் குர்ராம்.
வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை அடிப்பவனான இவன், கடந்த நவம்பர் 11ம் தேதி அதிகாலை
3 மணி அளவில் இங்கிலாந்தின் மத்திய கூட்டுறவு மருத்துவமனைக்கு சொந்தமான வளாகத்திற்குள் நுழைந்து உள்ளான் .
அப்போது மாம்பா மற்றும் பிசிபி எனப்படும் இரு போதை பொருட்களை அவன்
உட்கொண்டிருந்தான். அந்த வளாகத்தில் இருந்த பிணவறையின் பூட்டை உடைத்து உள்ளே
நுழைந்த அவன் அங்கிருந்த 9 பெட்டிகளையும் திறந்துள்ளான். அதில் மூன்று சடலங்களை
வெளியே எடுத்திருக்கிறான்.
சடலங்களிலிருந்து நகைகளை திருடிய கொள்ளையன் பெண் சடலத்துடன்
உடலுறவு கொண்டிருந்தான். அதிலும் இளம்பெண்களின்
சடலங்களை தேர்வு செய்து அவன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான்.
முன்னதாக அவன் பூட்டை உடைத்த போது எச்சரிக்கை ஒலி எழும்பவே அங்கு
ஊழியர்களும் காவல்துறையினரும் விரைந்தனர். அப்போது அவன் சடலத்துடன் உடலுறவு கொண்டதை
பார்த்து அதிர்ந்து போயினர்.
போதையில் இருந்த அவனை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி
வந்தனர். மறுபுறம் அவன் வெளியே எடுத்து வைத்திருந்த சடலத்தை பிரேத பரிசோதனை
செய்தபோது dna பரிசோதனையில் அவன் உடலுறவு கொண்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் குர்ராமுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு தீவிர
கண்காணிப்பு வைக்கப்பட்ட நிலையில் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
வழக்கை விசாரித்த நீதிபதி குர்ராமின் செயலானது மனித உணர்வுகள்
அனைத்தையும் அவமதித்துவிட்டதாக கண்டனம் தெரிவித்தார். பின்னர் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்ட காசிம் குர்ராமுக்கு நீதிபதி ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
இவன் உடலுறவு கொண்ட சடலத்தின் சொந்தக்காரர்கள், இவனது செயலால் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
உறவினரை இழந்து துக்கத்தில் வாடும் நிலையில் இதுபோன்ற மோசமான செயல்
தங்களை மேலும் காயப்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.