மும்பையில் 10 மற்றும் 11 வயதுச் சிறுவர்கள் இருவர் 9 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10 வயது சிறுவர்கள்!

அந்தேரி மேற்குப் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவர்களும் சிறுமியும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்கள்
எப்போதும் ஒன்றாக விளையாடுவது வழக்கம். மூன்று பேருமே நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி குடியிருப்பின் 12 மற்றும் 13-வது மாடிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரு சிறுவர்களும் வித்தியாசமான செயலில் ஈடுபட்டனர். 9 வயது
சிறுமியின் ஆடைகளை திடீரென இருவரும் அவிழ்த்துள்ளனர்.
எதற்காக இப்படி
செய்கிறார்கள் என்று முதலில் அந்த சிறுமிக்கு தெரியவில்லை. பிறகு பாலியல் ரீதியாக
அந்த சிறுமியை சிறுவர்கள் இருவரும் சீண்டியுள்ளனர். திடீரென சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி மறுநாள் கழிவறைக்கு காலைக் கடனைக்கழிக்கச் சென்றபோது பிரச்சினை ஏற்பட்டதையடுத்து தனது பெற்றோரிடம்
கூறியுள்ளார். அவர்கள் என்ன என்று விசாரித்துள்ளனர்.
அப்போது தனது
நண்பர்களுடன் விளையாண்டதாகவும், அவர்கள் தன் ஆடைகளை களைந்து அந்த இடத்தில் ஏதோ
செய்ததாகவும் அந்த சிறுமி புரியாமல் கூறியுள்ளார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ந்து
போயுள்ளனர்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அந்த இரு சிறுவர்கள் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.