பெங்களூரு: 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பியோடிய கொடூரன் கைது செய்யப்பட்டான்.
சாக்லேட் தர்றேன்னு சொன்னேன்..! பின்னாடியே வந்துட்டாள்! 8 வயது சிறுமியை சிதைத்த எல்லப்பா! உள் ஆடையை மறந்ததால் சிக்கினான்!

கர்நாடகா மாநிலம், கல்புர்கி அருகே உள்ள யாகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, சமீபத்தில் காணாமல் போனதன் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அவள் படித்த பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பள்ளியின் அருகே ஓரிடத்தில் புதரில் குறிப்பிட்ட சிறுமியின் சடலம் கிடந்ததை கண்டுபிடித்தனர். உடல் முழுக்க காயங்களுடன் சிறுமி அலங்கோலமாக கிடந்ததை பார்த்ததும், அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் என போலீசாருக்கு சந்தேகமின்றி தெளிவானது.
இதை யார் செய்திருப்பார்கள் என்ற நோக்கத்தில் ஆய்வு செய்தபோது, சிறுமியின் ஆடைகளுடன், ஆண் ஒருவரின் உள்ளாடை கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த உள்ளாடையை வைத்து, அதன் அடிப்படையில் யாரேனும் ஆண் அந்த பக்கம் வந்தாரா என போலீசார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
அப்போது, அதே பகுதியில் வசிக்கும் எல்லப்பா என்பவரை பொதுமக்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அந்த நபரை தேடி அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கே, எல்லப்பா மதுபோதையில் உடல் முழுக்க ரத்தக்கறையுடன் படுத்து கிடந்துள்ளான். அவனை விசாரித்ததில், சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்து வந்து, பலாத்காரம் செய்து, கொன்றுவிட்டதாக, ஒப்புக் கொண்டிருக்கிறான். இதையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது, என்று இவ்வழக்கை விசாரிக்கும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.