7G ரெயின்போ காலனி படத்தின் கதாநாயகன் ரவி கிருஷ்ணா மற்றும் கதாநாயகி சோனியா அகர்வால் இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்துள்ளனர்.
15 வருடங்களுக்கு பின் நேற்று இரவு தான்..! பிரபல ஹீரோ பற்றி சோனியா அகர்வால் வெளியிட்ட ரகசியம்!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_6947_1_medium_thumb.jpg)
இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 7G ரெயின்போ காலனி திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் ரவிகிருஷ்ணாவும் மற்றும் அனிதா என்ற கதாபாத்திரத்தில் சோனியா அகர்வாலும் இணைந்து நடித்தனர் .
இவர்கள் இருவரின் காதலை செல்வராகவன் வித்தியாசமான திரைக்கதை கொண்டு வெளிப்படுத்தியிருந்தார் . இந்தப் படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய வெற்றிப் படமாக்கப்பட்டது .
அந்த படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணா பெரிதாக தமிழ் சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை . இந்நிலையில் 15 வருடத்திற்கு பிறகு சோனியா அகர்வாலும் ரவி கிருஷ்ணாவும் சந்தித்துள்ளனர் . இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோவை சோனியா அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
சோனியா அகர்வால் வெளியிட்ட இந்த புகைப்படமானது ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு நேற்று இரவு தான் இந்த சந்திப்பு நடந்தது என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.