உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடக்க லலிதா சகஸ்ரநாமத்தின் இந்த 7 திருநாமங்களை ஜெபித்துக்கொண்டேயிருங்கள்!

ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.


ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி

1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!

2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!

3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!

4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!

5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!

6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!

7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.....மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.

இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்.

இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள். .அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்..