என்னை ரேப் செய்து வீடியோ எடுத்து ரசித்தான்: 37 வயது நடிகர் மீது 61 வயது நடிகை திடுக் புகார்! பிறகு வெளியான வீடியோவால் அதிர்ச்சி!

திருவனந்தபுரம்: ''மாத கணக்கில் என்னை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்தார்,'' என 61 வயது நடிகை, ஒருவர் மீது புகார் கூறியுள்ளார்.


டிவி சீரியல்கள் மூலமாக, மலையாளத்தில் பிரபலமான ஒரு நடிகைதான் இவ்வாறு புகார் தெரிவித்துள்ளார். 61 வயதாகும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என, ஊடகங்களில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

டிவி சீரியலில் நடிக்கும்போது, அதன் தயாரிப்புக்குழுவைச் சேர்ந்த 37 வயதான சியா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன்பேரில், சியா எனக்கு, செல்ஃபோன் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுப்பது வழக்கம்.  இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதலாக, என்னை மிரட்டி, அடிக்கடி சியா என்னை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்.

அதை வீடியோ எடுத்தும் ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது, வேலை காரணமாக, அவர் வெளிநாடு சென்றுள்ளார். என்னை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நடிகையுடன் செக்ஸ் செய்யும் காட்சிகளை சியா வாட்ஸ்ஆப்பில் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அது தற்போது பலருக்கும் பரவி வருகிறது. இதைப் பார்த்தால் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததைப் போல தெரிகிறது. ஆனால், விசயம் வெளியே பரவியதால், அதை மறைக்க, நடிகை பொய் புகார் கூறுகிறார் என, சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.