6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிப்பு! இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொன்ற பயங்கரம்!

ஜெய்ப்பூர்: 6 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்தியாவில் நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் சமீபத்திய வரவாக, ராஜஸ்தான் மாநிலம்,  டோங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அருகாமையில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி, கடந்த சனிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ளார். மாலை 3 மணியளவில் அவர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுமி வீட்டிற்கு வந்து சேரவில்லை.

இதன்பேரில், அவரது பெற்றோர் போலீஸ் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பள்ளியின் அருகே உள்ள புதர் ஒன்றில் சிறுமி அலங்கோலமான நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு பரிசோதித்ததில் யாரோ சில மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, சடலத்தை அங்கே வீசி சென்ற விவரம் தெரியவந்தது.  இதுபற்றி அலிகார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

அந்த மாணவி இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டை கழட்டி அதை வைத்தே கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதற்கு முன்னதாக அந்த சிறுமி மிகவும் கொடூரமாக பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளார்.