ட்யூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியை 33 வயது கணவனுக்கு விருந்தாக்கிய டீச்சர்! சென்னை விபரீதம்!

6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்திருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு நரேஷ் என்பவர் வசித்து வருகிறார். 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. விஜயலட்சுமியின் வயது 32. அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

விஜயலட்சுமி இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டில் டியூஷன் நடத்தி வந்தார். டியூஷனுக்கு வந்த ஒரு 6 வயது சிறுமியை நரேஷ் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கதறி அழுது கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சிறுமியின் சகோதரர் நிகழ்ந்தவற்றை வீட்டில் கூறியுள்ளார். 

உடனடியாக சிறுமியின் பெற்றோர் நரேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கணவன் மனைவியை வலைவீசி தேடி வந்தனர். பின்னர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் பூந்தமல்லியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

உடனடியாக அவர்களை மடக்கிப்பிடித்து காவல்துறையினர் கைது செய்து நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவமானது ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.