காட்டு யானைகள் சறுக்கி விழுந்து மூழ்கிய சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்து தத்தளித்த குட்டியானை! காப்பாற்ற பாசப்போராட்டம் நடத்திய 6 யானைகள்! பிறகு அரங்கேறிய பெரும் துயரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
தாய்லாந்து நாட்டின் தேசிய மிருகமாக யானைகள் கருதப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நாட்டில் வெறும் ஆயிரக்கணக்கில் யானைகள் உள்ளன. வடகிழக்கு தாய்லாந்து நாட்டில் "கோ யாய்" என்ற தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் நேற்று அதிகாலையில் யானைகள் பிறரும் சட்டம் அதிகரித்து கேட்டது.
இதனால் பயந்துபோன அதிகாரிகள் உடனடியாக சென்று பார்த்தனர். அதிகாரிகள் யானைகளுக்கு நிறைய தீனி வழங்கினர். எப்படியாவது அவற்றுக்கு உணவு வழங்கி காட்டிற்கு மீட்டு வருவதற்கு முயற்சித்தனர். ஆனால் 6 யானைகள் நீர் நிலையிலிருந்து சறுக்கி மூழ்கிவிட்டன.
உடனடியாக வனத்துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 மணிநேரம் கழித்து 6 யானைகளின் சடலங்களை "ஹெயூ நரோக்" என்ற நீர்நிலையிலிருந்து மீட்புக்குழுவினர் மீட்டெடுத்தனர்.
இந்த சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.