12 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது திருவெண்ணெய்நல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
53 வயது கிழட்டு நபரிடம் சிக்கிய 12 வயது சிறுமி! யாரும் இல்லாத நேரத்தில் அரங்கேற்றிய லீலை! அதிர்ச்சி சம்பவம்!

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள அருங்குறுக்கை கிராமத்தின் தெற்கு தெருவில் 12 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே நேற்று காலையில் மாணவி பைப்பில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது வடக்கு தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்காளான மாணவி தந்தையிடம் கதறி அழுது புலம்பியுள்ளார். உடனடியாக தந்தை திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை முடிந்த பின்னர் பன்னீர்செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.