13 வயது சிறுமி வாயில் மதுவை ஊற்றி மாறி மாறி சீரழித்த 3 பேர்! அதிர வைத்த சம்பவம்!

13 வயதுச் சிறுமியை கட்டாயமாக மது அருந்த வைத்து, கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


அம்பாலாவைச் சேர்ந்த சிறுமி வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்ற நிலயில் மாலையான பிறகும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் வீடு திரும்பிய சிறுமி தனக்குநேர்ந்த கொடுமைகளை விவரித்தார். சந்தைக்கு சென்ற தன்னை அதே பகுதியைச் சேர்ந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

அந்த நபர் ஒதுக்குப் புறமான ஒரு இடத்துக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்கனவே இருவர் இருந்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் மூவரும் சேர்ந்து தன்னைக் கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றிக் குடிக்க வைத்ததாகத் தெரிவித்த அந்தச் சிறுமி, அதனைத் தொடர்ந்து அவர்கள் தன்னை கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மறுநாள்தான் அவர்களிடம் இருந்து தப்ப முடிந்ததாகவும் சிறுமி கூறினார். இது தொடர்பான சிறுமியின் பெற்றோரின் புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.