திடீரென சரிந்த மண் ! சுஜித்தை மீட்பதில் பின்னடைவு ! அதிர்ச்சியில் பெற்றோர்!

ஆழ்துளை கிணற்றில் 25 ஆழத்தில் இருந்த சுஜித் தற்போது 65 ஆழத்திற்கு சென்றதாகவும் அவர்மேல் திடீரென்று மேல் இருந்த மண் சரிந்ததால் மீட்புப்பணி சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரிட்டோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்துடன் அமைந்த வீடு ஒன்றை அப்பகுதியில் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தோட்டத்தில் விளையும் சோளத்தை தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். இந்த கிணறானது 30 அடி ஆழம் பெற்றது. இந்த கிணற்றுக்கு அருகே பிரிட்டோவின் 2 வயது குழந்தையான சுஜித் விளையாடி கொண்டிருந்தது.

விளையாடி கொண்டிருந்த சுஜித் தவறி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த உடன் பதறிப்போன பிரிட்டோ தன்னுடைய நண்பர்களுடன் விரைந்து மீட்ங முயற்சித்தார். 25 அடியில் குழந்தை சிக்கிக்கொண்டதால் அவர்களால் மீட்க இயலவில்லை. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 மணி நேரமாக தோண்டிக்கொண்டிருந்த பாதையில் பாறை இருந்துள்ளதால் மாற்று வழியில் முயற்சித்து வருகின்றனர்.

ஆழ்துளை கிணறில் சிக்கி கொண்டவர்களை மீட்பதில் திறமைசாலிகளாக கருதப்படும் நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்தக் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் துரதிஷ்டவசமாக அந்த சுஜித் என்கிற சிறுவன் 25 அடியில் உட்கார்ந்த நிலையில் இருந்த அவன் தற்போது 65 அடிக்கு உள்ளே விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமில்லாமல் மேலிருந்து மண்ணும் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உள்ளே விழுந்த சிறுவனை காப்பாற்றும் செயலில் இருந்து சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சுஜித் இன் பெற்றோர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவமானது மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.