நியூயார்க்: 6 வயது சிறுமியை 100 முறை வன்கொடுமை செய்து, அதனை சமூக ஊடகங்களில் நேரலை செய்த நபருக்கு 120 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிறந்தது முதல் 6 வயது வரை குழந்தையுடன் வல்லுறவு! ஆன்லைனில் நேரலையும் செய்த சைக்கோ!
அமெரிக்காவில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த ஸ்டீவன் டக்ளஸ் குரூக் என்ற 29 வயது இளைஞன்தான் இத்தகைய கொடூரத்தைச் செய்துள்ளான். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் காணாமல் போன மற்றும் சீரழிக்கப்பட்ட குழந்தைகள் தேசிய மையத்திற்கு ஒரு புகார் கிடைத்தது.
அதில், இளைஞன் ஒருவன், 6 வயது சிறுமியை, பிறந்த நாள் முதல், தொடர்ச்சியாக, இதுவரை 100 முறை வன்கொடுமை செய்து, அதனை சைல்ட் போர்ன் என்ற பெயரில் இணையதளத்தில் பதிவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த நபரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவர் குற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். குறிப்பிட்ட நபர், அந்த குழந்தையை பிறந்த நாள் முதலாக, தொடர்ந்து 6 வயது வரை பலாத்காரம் செய்து ,அதனை தனது மொபைலில் வீடியோவாக படம்பிடித்து live.me உள்ளிட்ட சமூக ஊடகங்களில், பதிவேற்றி வந்திருக்கிறார்.
இதுபற்றி அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தும் காதலிக்கும் தெரியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண், எந்த எதிர்ப்பும் காட்டாமல், இந்த குழந்தை சீரழிவிற்கு உதவியாகச் செயல்பட்டுள்ளார். இதன்பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில், குறிப்பிட்ட காமக்கொடூர இளைஞனுக்கு, தற்போது 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.