ஒழுங்கா டிரஸ்ஸ ஒவ்வொன்னா கழட்டு..! லிஃப்ட் கேட்ட 11ம் வகுப்பு மாணவியை துஷ்பிரயோகம் செய்த பஸ் டிரைவர்! கும்மிடிப்பூண்டி பரபரப்பு!

பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கும்மிடிபூண்டி சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும். இப்பகுதியை சேர்ந்தவர் செஞ்சிகுமார். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி மாணவி ஒருவர் ஷேர் ஆட்டோ பழுதானதால் அடுத்த வண்டிக்காக காத்திருந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற செஞ்சிகுமார் அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். முதலில் அந்த மாணவி தயங்கினாலும், பின்னர் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மறைவான பகுதிக்கு சென்று மனைவியை இறக்கிவிட்டுள்ளார். பின்னர் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மாணவி மிகவும் பயந்து போனார்.

பின்னர் கத்தி முனையில் மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாணவி பயந்த முகத்துடன் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அந்த மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். 

உடனடியாக மாணவியின் பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.