சிறுநீர் பிரச்னைகளுக்கு கரும்பு சாறு அரும்மருந்தாக இருக்கிறது !!மருத்துவ செய்தி..

தைப்பொங்கல் திருநாளில் மட்டுமே கரும்பு சாப்பிடும் பழக்கம் மக்களுக்கு இருக்கிறது. வாரம் ஒரு முறையாவது கரும்புச்சாறு குடிப்பது உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.


கரும்பில் இருந்து வெல்லம், சர்க்கரை, கல்கண்டு போன்றவை தயாரிக்கப்பட்டாலும் கரும்புச்சாறு குடிப்பதே அதிக பலன் தருவதாக உள்ளது. சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

• கரும்புச்சாறுக்கு தடையில்லாமல் சிறுநீரை வெளியேற்றும் தன்மை உண்டு என்பதால் சிறுநீர் எரிச்சலை நீக்குகிறது.

• உடலில் இருந்து வெளிவரும் கெட்ட வாடையையும், வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கரும்புக்கு உண்டு.

• கரும்பில் கலந்துள்ள ரசாயனங்கள், தேவையற்ற கொழுப்பை கரைத்து குண்டான உடம்பை மெலிய வைக்கிறது.

• விக்கலை நிறுத்தும் சக்தி கரும்புச்சாறுக்கு உண்டு. மேலும் உடல் வீக்கத்தை குறைக்கும் தன்மையும் உண்டு.

குறைவாக சாப்பிட்டால் ஜீரணத்தை எளிதாக்குக்கிறது கரும்பு. ஆனால் கரும்பு அதிகம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால் போதிய அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.