கோவை சிறுமியின் பிறப்புறுப்பு, ஆசனவாய் சிதைப்பு! கழுத்து நரம்பு அறுப்பு! கொடூரர்களை நெருங்க முடியாத போலீஸ்!

கோவை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பலரையும் மிரள வைத்துள்ளதுடன் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை துடியலூர் அருகே உள்ள pannimadai பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சென்றுள்ளனர். இந்த வழக்கை தற்போது கோவை மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர வைத்துள்ளது. 6 வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரர்கள் கும்பலாக சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் அந்த சிறுமியின் பிறப்பு உறுப்பு சிதைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறுமியின் ஆசனவாய் பகுதியையும் அந்த மனித மிருகங்கள் நாசம் செய்துள்ளனர். எப்படி 6 வயது சிறுமியை இப்படி செய்ய முடிந்தது என்று மருத்துவர்களே அதிர்ந்து போயுள்ளனர்.

இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானவுடன் கோவை மக்கள் அனைவரும் கொந்தளித்துப் போய் உள்ளனர். குற்றவாளியை கண்டுபிடித்து உடனடியாக அவர்களுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

டெல்லியில் நிர்பயா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி எப்படி சிதைக்கப்பட்டாலும் அதை விட கொடூரமாக 6 வயது சிறுமி சிதைக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

கொலை நடைபெற்று நான்கு நாட்கள் ஆக உள்ள நிலையில் தற்போது வரை போலீசால் குற்றவாளிகளை நெருங்க கூட முடியவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மேல்நடவடிக்கை அவசியம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.