அ.ம.மு.க. வாக்குகள்தான் அ.தி.மு.க.வுக்கு ஆபத்தாக அமையும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
அடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன் வேட்பாளர். அமைச்சர் தங்கமணி அதிரடி

திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பொன் சரஸ்வதிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து களமிறங்கிய அமமுக நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கொல்லிமலை பி.சந்திரன் தன்னை அதிமுகவில் இணைந்தார்.
நிகழ்ச்சியின்போது சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. பி ஆர் சுந்தரம், பொன் சரஸ்வதி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலரும் உடனிருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி கூறுகையில்,
சேந்தமங்கலத்தில் அமமுக வேட்பாளராக போட்டியிட இருந்த பி சந்திரன் எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார் இனி அவர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி எடப்பாடியாரின் அலை தமிழகத்தில் வீசுகிறது என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது, ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்துள்ளேன்.
இன்றைய சூழ்நிலையில் தீயசக்தி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க அதிமுகவில் இணைந்து செயல்படுவது தான் சரியாக இருக்கும் என கருதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய என்னுடைய உழைப்பை தருவேன். பாடுபடுவேன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்வேன்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் எடப்பாடியாருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத்தான் காட்டுகிறது.