விலை மலிவாக இருந்தாலே மகத்துவம் யாருக்கும் தெரிவதில்லை, அதனால்தானோ என்னவோ மருத்துவ குணம் நிறைந்த செளசெள காயை பலரும் விரும்புவதே இல்லை.
நரம்புக்கு பலம் தரும் செளசெள !!

·
செளசெளவில் கார்போஹைட்ரேட்,, புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ,பி,சி,,கே போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் நரம்புகளுக்கு புத்துணர்வும் பலமும் அளிக்கிறது.
·
உயர் ரத்தஅழுத்தத்தைக் குறைத்து உடம்பை சமநிலையில் வைப்பதற்கு வாரம் இருமுறை இதனை எடுத்துக்கொண்டால் போதும்.
·
சௌசௌவில்
காணப்படும் காப்பர்,
மாங்கனீசு போன்றவை
தைராய்டு நோயால்
அவதிபடுபவர்களுக்கு சிறந்த
மருந்தாகப் பயன்படுகிறது.
· வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.