ஏலக்காய் வாயில் போட்டு மென்னு பாருங்க… அற்புதம் நடக்கும்

நறுமணப்பொருட்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய் உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. ஏலக்காய் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். மலைப்பகுதியில் மட்டுமே விளைகிறது.


தேநீருக்கு மணம் சேர்க்கவும், உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், வாசனையூட்டியாகவும் ஏலக்காய் பயன்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கும் பல்வேறு வகையில் பயனளிக்கிறது.

• வாய் துர்நாற்ற பிரச்னையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் கிடைக்கும்.

• ஏலக்காயை மென்று சாப்பிட்டால் இருமல், நெஞ்சு சளி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

• ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை சீர்படுத்தி, பசியைத் தூண்டும் தன்மை ஏலக்காய்க்கு உள்ளது.

• நரம்பு மற்றும் மூளையை சுறுசுறுப்படைய வைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் தூளை வெந்நீரில் போட்டு கொப்பளித்தால் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண் போன்றவைகளில் இருந்து விரைவில் ஆறுதல் கிடைக்கும்.