சேலத்தில் பரபரப்பு! பெண்ணின் வயிற்கை கிழித்து கல்லை வைத்து ஆற்றில் வீசிய கொடூரம்!

மேட்டூர் பெண்ணை கொடூரமாக கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிய சம்பவத்தில் கைதான 3 பேர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.


சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் காளையனூரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  மேட்டூர் காவிரி நீர்த்தேக்க பகுதியில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

மிகவும் கொடூரமான முறையில் பழனியம்மாளின் வயிற்றை கிழித்து அதற்குள் கல்லை வைத்து காவிரி நீர்தேக்கத்தில் வீசியிருந்தனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது பழனியம்மாளுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து பெற்றோருடன் பழனியம்மாள் வசித்து வந்ள்ளார்.

பெற்றோரும் இறந்த நிலையில்,  சகோதரியுடன் பழனியம்மாள் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  பழனியம்மாளின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த மாரியப்பனின் வைக்கோல் போர்  தீப்பற்றி எரிந்துள்ளது.

இதற்கு பழனியம்மாள் தான், காரணம் என்று கூறி, மாரியப்பன் அவரை தாக்கியுள்ளார். பதிலுக்கு பழனியம்மாளும் அவரை கல்லால்  தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட பகையில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து மாரியப்பனை பிடித்து போலீசார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். அப்போது,  மாரியப்பன் பழையூரை சேர்ந்த மாது என்ற மாதப்பன்,  கருங்கல்லூரை சேர்ந்த சுப்ரமணியம் ஆகியோருடன் சேர்ந்து பழனியம்மாளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்

கொலை குறித்து மாரியப்பன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,  வைக்கோல் போரை எரித்த விவகாரத்தில் பழனியம்மாள் மீது ஆத்திரத்தில்  இருந்தேன். இதனால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று மாது, சுப்ரமணியம்  ஆகியோரிடம் கூறினேன்.

கொலை செய்த அன்று மாலை 3 பேரும் தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த பழனியம்மாளை கல்லால் சரமாரியாக தாக்கினோம். அதில் அவர்  இறந்துவிட்டார். பின்னர் சடலத்தை ஆற்றுப்பகுதிக்கு இழுத்து வந்து, வயிற்றை  கத்தியால் அறுத்து, அதற்குள் கல்லை வைத்து கட்டி ஆற்றில் வீசினோம்  

இவ்வாறு பழனியப்பன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து அவர்களிடமிருந்து வயிற்றை அறுக்க  பயன்படுத்திய கத்தி, கொலை செய்ய பயன்படுத்திய கல், 3 பேரும் ஓட்டிவந்த பைக்  போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும்  மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் மத்திய  சிறையில் அடைத்தனர். வைக்கோல் போரை எரித்ததற்காக பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.