மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பிரபல நடிகரின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதுளை பழ ஜூஸில் மயக்க மருந்து..! மயங்கிய கல்லூரி மாணவி..! பிரபல நடிகரின் மகன் செய்த கற்பழிப்பு சம்பவம்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகில் பல ஆண்டுகளாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூர்யபிரகாஷ். இவர் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகனின் பெயர் விஜய் ஹாரிஸ். இவருடைய வயது 25. "நாங்களும் நல்லவங்க தான்" என்ற திரைப்படத்தில் விஜய் ஹாரிஸ் நடித்து வந்தார்.
இவருக்கு தேனாம்பேட்டையில் இயங்கிவரும் பிரபல கல்லூரியில் பி.காம். படிக்கும் 2-ஆம் மாணவியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி மாத தொடக்கத்தில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அந்த மாணவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த பிறகு, விஜய் ஹாரிஸ் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி உளைச்சலுக்கு ஆளானார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்த விஜய், என்னிடம் காண்பித்து மிரட்டி சுகம் அனுபவித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் தொல்லை தாங்க முடியாத அந்த இளம்பெண் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றைக் கூறி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டதற்கு பிறகு விஜய் ஹாரிஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.