சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு.சூப்பர் ஸ்டார் ரஜினி சார்.. ராகவா லாரன்ஸ் அதிரடி.!!

கடந்த ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் இதழின் 50வது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவரது பேசும்பொழுது கடந்த 1971-ல் நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதனையடுத்து பலரும் நடிகர் ரஜினிகாந்தின் மீது போலீசில் புகார் அளித்தனர். மேலும் அவர் இவ்வாறாக தந்தை பெரியாரைப் பற்றி தவறாக கருத்துக்கள் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அரசியல் தெரியாது! ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும்! திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை,யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல!
ஏன் அவரை திட்டுபவர்களைக் கூடபதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்! எதையும் ப்ளான் செய்தோ, திட்டமிட்டோ அவதூறாக பேசக்கூடியவர் அல்ல!ஆனால் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டதாக கூறுகின்றனர். அப்படி பேசக்கூடியவர் என்றால் 2006 ஆம் ஆண்டு பெரியாரின் தீவிரத்தொண்டரான இயக்குநர் திரு. வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தபோது"திரு வேலுபிரபாகரனே எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து, அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் திரு.சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள், எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்! என்று பதிவு இட்டுள்ளார்.