தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்..! 3 நாட்களுக்கு கொட்டப் போகுது கனமழை!

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான மழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரான புவியரசன் அடுத்த சிலநாட்களில் வானிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது.

குமரிக்கடல் ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிகழ்ந்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் 'ஆரஞ்சு ' எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 20,21,22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை மிதமாக இருக்கும்.

அதிகபட்சமாக 24 மணிநேரத்தில் புவனகிரியில் 9 செ.மீ மழையும், நாகர்கோவிலில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது. குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதியில் சில நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.