சீமானுடன் தனிமையில் செய்தது என்ன? வெடியோ வெளியானது எப்படி? விஜயலெக்ஷ்மி பரபர தகவல்!

பிரபல அரசியல் கட்சித்தலைவர் நடிகையுடன் தனிமையிலிருக்கும் வீடியோ வெளியாகியுள்ள சம்பவமானது சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சி முதன்மையானது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பல்வேறு வகையில் இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இவர் முதன் முதலில் சினிமாவில் இருந்ததை அனைவரும் அறிவர். அப்போது இவருக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகை விஜயலட்சுமியை இவர் கை விட்டு விட்டார் என்றும் சினிமா துறையில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. அதன் பின்னர் நடிகை விஜயலட்சுமி இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஆனால் சீமான் இதற்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. மேலும் பலரும் நடிகை விஜயலட்சுமி பணத்திற்காக இவ்வாறு செய்து வருவதாக குற்றம் சாட்டினர். 

இதனிடையே நேற்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சீமான் மேலாடையின்றி இருப்பது போன்றும், மேலும் மற்றொரு பெண்ணுடன் தனி அறையில் இருப்பது போன்றும் காட்சி அளித்தது. 

யார அந்த பெண்ணாக இருக்கக் கூடுமென்று சமூக வலைத்தளத்தினர் யோசித்துக்கொண்டிருந்த வேலையில், நான் தான் அந்த வீடியோவில் இருந்தேன் என்றும் அந்த வீடியோவை வெளியிட்டது நான்தான் என்றும் நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பணத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று சீமான் பொய் பிரச்சாரம் செய்த பிறகு, என்னை பலரும் ஒதுக்கி வைத்துவிட்டனர். சினிமாவில் வாய்ப்புகள் முழுவதுமாக தீர்ந்துவிட்டன.

நல்ல மாண்புடைய பெண் என்பது தெரிவிப்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். பொதுமக்களாகிய உங்களை நம்பி தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்யும்போது எனக்கு மரண வலி ஏற்பட்டது. இருப்பினும் என் தரப்பில் உள்ள நியாயத்தை மக்களிடம் எடுத்து வைப்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். 

என்னைப்பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதெல்லாம் ஒரு விஷயமா" என்று கூறிவிட்டு சிரித்து கொண்டே அங்கிருந்து நழுவியுள்ளார். இதன் மூலம் சீமான் என்மீதான கேள்விகளுக்கு பதில் எழுத இயலாமல் திணறுகிறார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். பொதுமக்களை நம்பி தான் நான் இந்த வீடியோவை வெளியிட்டேன். இப்போதாவது அவரை பற்றி புரிந்து கொள்ளுங்கள் என்று அழுதபடி கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.