பிரபல பாலிவுட் நடிகரொருவர் நடிகையின் தொப்புளில் முகம் வைத்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகையின் அந்த இடத்தில் முகத்தை வைத்து போஸ்..! படப்பிடிப்பு தளத்தில் நடிகர் செய்த செயல்! யார் தெரியுமா?

இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த "ஆதித்யா வர்மா" என்னும் திரைப்படமானது மிகப்பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் பாலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தில் அனன்யா பாண்டே என்ற கதாநாயகியுடன் நடித்துவருகிறார்.
தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு "ஃபைட்டர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக கூறப்படுகின்றது. மேலும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோகர் இந்த திரைப்படத்தை தயாரிப்பதும் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவின் தொப்புளில் முகம் புதைத்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தங்களுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று இரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக பைக்கில் செல்லும் புகைப்படமும் வெளியாகியது. அனன்யா பாண்டே பைக் டேங்கர் மீது விஜய் தேவரகொண்டா வை நோக்கி அமர்ந்து கொண்டிருப்பது போன்று அந்த புகைப்படம் அமைந்திருந்தது. விஜய் தேவரகொண்டா ஒரு டி-ஷர்ட்டும், அனன்யா பாண்டே ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பானது மும்பை மாநகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.