நடுவர்களின் தவறான முடிவை எதிர்த்து கேள்விகேட்ட தோனிக்கு அபராதம்!

நேற்றைய போட்டியில் விதிகளை மீறிய தோனிக்கு 50 % அபராதம் விதிக்கப்பட்டது. இது இரண்டாம் லெவல் குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு IPL நிர்வாகத்திற்கு எதிராக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


நேற்றைய போட்டியில், கடைசி ஓவரில் டோனி அவுட் ஆன பிறகு, ஸ்டோக்ஸ் வீசிய பந்து புள் டாஸ் ஆக இருந்ததால் அம்பயர் நோ பால் என அறிவித்தார்.அனால் லெக் அம்பயர் இதை நோ பால் என அறிவிக்கவில்லை . இதனால் அம்பயர்கள் இருவரும் கலந்து பேசி வந்தனர். இதனால் கோபமடைந்த டோனி களத்தில் இறங்கி அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

IPL விதிகளை மீறி , ஆட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது ஆடுகளத்தில்  வந்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக csk அணியின் கேப்டன் தோனி க்கு நேற்றைய போட்டியின் சம்பளத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ipl விதிப்படி இது தவறாக இருந்தாலும் நடுவர்களின் தவறான முடிவை எதிர்த்து கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் .

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

இதனால் அந்த ஆனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கமுடியவில்லை. ராஜஸ்தான் ராயல் அணியில் பெண் ஸ்டோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தீபக் சஹர், ஜடேஜா, ஷார்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் சென்னை அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.பின்னர் தோனியும் அம்படி ராயுடுவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.சிறப்பாக விளையாடிய ராயுடு 57 ரன்களுக்கு அவுட் ஆனார்.கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டோனி அந்த ஓவரின் 3வது பந்தில் அவுட் ஆனார். இவர் 58 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை சான்ட்நெர் எதிர்கொண்டார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை அணியை அவர் வெற்றி பெற வைத்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.