ஆட்டோ ஓட்டுநர் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 குடும்ப பெண்கள்! மிரட்டி ரேப் செய்த விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி எனும் இடத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் காக்காபாளையத்திலுள்ள விடுதலை சிறுத்தைகள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சொந்தமாக 2 ஆட்டோக்கள் இருந்தன. ஒரு ஆட்டோவை தன்னுடைய கூட்டாளியிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை தான் ஓட்டி வந்துள்ளார். இவருடைய பயணம் செய்த பெண் ஒருவர் மோகன்ராஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து தொடர்ந்து மிரட்டி வருவதாக அப்பகுதி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
தன்னுடைய அரசியல் செல்வாக்கினால் திமிராக வலம் வந்து கொண்டிருந்த மோகன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். மோகன்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
மோகன்ராஜ் தொடர்ந்து பெண்களை கற்பழித்து வரும் காமுகன் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதுவரை 7 பெண்களை கற்பழித்து அவர்களுடைய காம வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 7 பெண்களில் ஒருவர் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஆட்டோவில் தனியாக வரும் பெண்களிடம் முதலில் நல்லவர் போன்று நடிப்பார். அதன் பின்னர் அவர்களுடைய குடும்ப விவரங்களை கேட்டுக்கொண்டு பொருளாதார நிலையை அறிந்து கொள்வார். பொருளாதாரத்தில் சற்று பின்தங்கியிருந்தால் அவர்களுக்கு உதவுவது போன்று வீட்டிற்கு அழைத்து செல்வார். அங்கு வைத்து அவர்களை மிரட்டி தன்னுடைய இச்சைக்கு இணங்க வைத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வார்.
பின்னர் அதனை வீடியோவாக எடுத்து கொண்டு பெண்களை மிரட்டி வருவார். இவருடைய ஆணைகளை பெண்கள் ஏற்கவில்லை என்றால் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவார். ஆனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை இதுவரை யாருமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இதற்கு காரணம் மோகன்ராஜின் அராஜக நடவடிக்கைகளும், அரசியல் செல்வாக்குமே ஆகும்.
மோகன்ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி இவருடைய தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றார். பின்னர் நண்பரின் வீட்டிற்கு சென்று வந்தபோது அவருடைய மனைவியை 2-வது திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களிலேயே அவரும் மோகன் ராஜின் அட்டூழியங்களை தாங்க இயலாது பிரிந்து சென்றார். இவரிடம் சிக்கிக் கொண்ட ஒரு பெண்னின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
இவனுடன் ஆட்டோ ஓட்டும் கூட்டாளியும் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.