வயிற்று வலியால் துடித்த 16 வயது பெண்..! ஹாஸ்பிடல் ஸ்கேன் ரிப்போர்ட்டில் பெற்றோருக்கு தெரிய வந்த பேரதிர்ச்சி! காரணம் 27வயது இளைஞன்!

புதுச்சேரி அருகே பிளஸ் ஒன் படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆக்கிய கட்டிட தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதிக்கு அருகே உள்ள கோட்டக்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு வயது 27. இவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 பின்னர் அந்த மாணவியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போதுதான் அவருடைய பெற்றோருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனை செய்ததில் அந்த மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் தங்களது மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர்.

விசாரித்ததில் அந்த மாணவியை அந்த பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி சதீஷ் என்பவர் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பம் அடைந்ததாக தெரியவந்தது. இதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் ஆரோவில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிடத் தொழிலாளி சதீஷ் என்பவரை கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.