ஆம்பூர் அருகே கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான காதலன் வீட்டு முன் இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.
கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான காதலன் வீட்டு முன் இளம் பெண் தர்ணா! போலீஸ் காலில் விழுந்து கதறிய கொடுமை!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநரும் காதலித்து வந்துள்ளனர். காதல் மயக்கத்தில் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளனர்.
காதலர்கள் இருவரும் வரம்பு மீறியதால் ரேணுகா கர்ப்பமாகியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஜானகிராமன் கூறியதால் கர்ப்பத்தை ரேணுகா கலைக்கவில்லை. ஆனால் கூறியபடி ரேணுகாவை ஜானகிராமன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் செய்து கொள்ள ஜானகிராமன் மறுத்ததால் ஆம்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து காதலன் வீட்டின் முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த போலீசாரின் காலில் விழுந்து அழுதார். இது காண்போரை கலங்க வைத்தது.தப்பி ஓடிய ஜானகிராமனை போலீசார் தேடி வருகின்றனர்.