ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் கீழாடைக்குள் கையை விட்ட இளைஞன்! பிறகு நிகழ்ந்த தரமான சம்பவம்!

ரயில் நிலைய கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இளம்பெண்ணின் கீழாடைக்குள் கையை விட்ட நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.


குர்லாவில் இருந்து பான்வெல் நகருக்கு சென்ற ரயிலில் செம்பூர் செல்வதற்காக வடாலா ரயில் நிலையத்தில் அந்த இளம் பெண் ஏறினார். அவர் மும்பையின் வழக்கமான நவநாகரிகப் பெண்களைப் போன்று பேண்ட் மற்றும் மேலாடை அணிந்திருந்தார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கவனத்தை அவர் பக்கம் திரும்பிய போது அவரது பேண்ட்டுக்குள் ரயிலில் இருந்த நபரின் கை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை வளைத்துப் பிடித்தனர். 

இது தொடர்பான புகாரின் பேரில் வடாலா ரயில்வே போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். விசாராணையில் அந்த நபர் விக்ரோலி என்ற இடத்தைச் சேர்ந்த ஷாதூப் ஷேக் என்று தெரியவந்தது. அந்த இளம் பெண் ரயில்வே போலீசாரிடம் அளித்த புகாரில், ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் ரயிலில் ஏறிய போது தனது உடலில் யாரோ ஒரு நபரின் கை படுவதையும், தனது கீழாடைக்குள் அந்த நபர் கையை விடுவதையும் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து நொடிநேரமும் தாமதிக்காமல் அந்த நபரின் மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு சக பயணிகளின் உதவி கேட்டு கூச்சலிட்டதாகவும் கூறியுள்ளார். 

ஷாதுப் ஷேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவன் மீது பழைய குற்றங்கள் ஏதும் உள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.