குழந்தை பெற்று 6 மாதத்தில் பெண் போலீசுக்கு தாய் வீட்டில் ஏற்பட்ட கொடூரம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பிரசவத்திற்காக மருத்துவ விடுப்பில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் புதுசெந்நெல்குளம் கிராமம் அருகே குடும்பத்துடன்  வசித்து வருபவர் அமுதவள்ளி .இவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அமுதவள்ளி மற்றும் அவரது கணவரும் அதே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி கடந்த ஒரு வருடமாக மருத்துவ  விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. 

அமுதவள்ளிக்கு எட்டு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தனது தாய் வீட்டில் தங்கியிருந்தபடி குழந்தையை அமுதவள்ளி கவனித்து வந்தார். கணவர் தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென அமுதா உயிரிழந்துவிட்டதாக கணவனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வருவதற்குள் தாய் வீட்டை சேர்ந்தவர்கள் உடலையும் மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து அறிந்து அங்கு வந்த அமுதவள்ளியின் கணவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக போலீசார் அங்கு வந்து அமுதுவள்ளி சடலத்தை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தாய் வீட்டில் மர்மமான முறையில் பெண் போலீஸ் உயிர் இழந்ததும் அதனை மறைக்க அவர்கள் முயன்றதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.