குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவு தவிர்ப்பது இன்று சகஜமாகிவிட்டது. காலை எழுந்தவுடன் எப்படி உணவு சாப்பிடமுடியும் என்று பெற்றோரும், அதிக அக்கறை காட்டுவதில்லை.


• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும்.

• காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கமுடியும் என்கிறது ஆய்வு.

• ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடாமல் பிஸ்கெட், பிரெட் சாப்பிடும் பிள்ளைகள் வகுப்பில் தூங்கிவழிவார்கள், அத்துடன் படிப்பிலும் பின்தங்கியே இருப்பார்கள். 

• காலை உணவு தினமும் வித்தியாசமாக, சுவையாக இருக்கும்படி கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.

தினமும் இரவு சாப்பாட்டை சீக்கிரம் கொடுத்து உறங்கச்செய்து, காலை வேகமாக எழுப்பிவிட வேண்டும். அப்போதுதான் காலை எழுந்து அவசரமில்லாமல் சாப்பிட்டு பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.