மத்திய அமைச்சரவையில் திமுக விற்கு இடம்! டிஆர் பாலு வெளியிட்ட ஷாக் தகவல்!

“தினமலர்” பொய்ச் செய்திக்கு டி.ஆர்.பாலு மறுப்பு.


நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று

அந்த நடைமுறைப் பழக்கப்படி பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்களும் இணை அமைச்சர் திரு.அர்ஜீன்ராம் அவர்களும் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.

அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெறியப்படுத்தினர்

ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தினமலர் (09-06-2019) நாளேட்டின் யூகச்செய்தி கடைந்து எடுத்த கலப்படமற்ற பொய் (Un-Adultrated). தினமலர் நாளேட்டிற்கு திரிபுவாதமும் திருகுதாளமும் புரிவது தினசரி பழக்கம் ஆகிவிட்டது

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் - அவரின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஓளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை.