காற்று வாங்க மாடியில் படுத்திருந்த பெண்! விலகிய ஆடை! பிறகு இளைஞனால் நேர்ந்த விபரீதம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பக்கத்துவீட்டு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்


முசாஃபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கோபா கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு தனது வீட்டின் மேல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ரூபேஷ்குமார் என்ற நபர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது 

இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட கணவன் மற்றும் உறவினர்கள் மேலே ஓடிவந்தனர் இதையடுத்து அந்த நபர் தப்பி ஓடிவிட்டான் இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூபேஷ் குமாரை கைது செய்தனர். 

அதேபோன்று மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகரில் 12 வயது உறவுக்கார சிறுமியை ஓராண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 48 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையில் சிறுமியை தனியாக வீட்டில் விட்டு அவரது தந்தை வேலைக்கு சென்று வந்தார்.

 தந்தை வேலைக்கு சென்ற பின் சிறுமியிடம் ஐஸ்கிரீம் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி தருவதாக ஆசை காட்டி அந்த நபர் கடந்த ஓர் ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் அந்தச் சிறுமியின் புகாரின் பேரில் அந்த நபரை கடந்த வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்